பால்வள மேம்பாட்டிற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
ஊட்டி:
மத்திய பால்வள மேம்பாட்டுக் கழகம், தமிழகத்தில் பால்வள மேம்பாட்டிற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மாநில பால்வளத்துறை அமைச்சர் சுந்தரம்தெரிவித்தார்.
ஊட்டியில் மாநில பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பால் உற்பத்தியில் குஜராத், மகராஷ்டிரா ஆகியவை முன்னணியில் உள்ளன. இதற்குஅடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 95ம் ஆண்டு தமிழகத்தில் பால் உற்பத்தி 11.7 லட்சம் லிட்டராகஇருந்தது. இது தற்போது 17.5 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
மத்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் தமிழகத்தில் பால் பொருட்களை உற்பத்திசெய்யவும், பால்வளத் துறை மேம்பாட்டிற்காகவும், 200 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 20கோடி ரூபாய் செலவில் திருச்சியில் பாலைப் பயன்படுத்தி ஐஸ் கிரீம் தயார் செய்யும்தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது.
இரண்டரை கோடி ரூபாயில் ஊட்டியில் ஜெர்ஸி கன்றுகள் உற்பத்தி செய்ய ஒருபண்ணை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி, மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. மற்ற மாவட்டங்களில்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நஷ்டத்தில் இயங்கிய போதிலும் இந்தமூன்று மாவட்டங்களும் முன் மாதிரியாக லாபத்தில் செயல்பட்டு வருகின்றன.
ஊட்டியில் செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதியில் சர்வதேச அளவிலான பால் வளம்குறித்த கருத்தரங்கு நடக்கிறது என்று அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications