For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் எரித்த 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அழகிரிக்காக மதுரையில் அரசு பஸ்களை எரித்து சாம்பலாக்கிய 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதுரையில் கலவரத்தில் ஈடுபட்டு அரசு பஸ்களுக்கும், பொதுசொத்துக்களுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியதுடன் பாதுகாப்பிற்கு குந்தகமான வகையில் ஈடுபட்டவர்களைபோலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் பெயர்முத்து (50), கருப்பையா (30), பரட்டையன் என்ற வெங்கடேசன் (35), செல்லத்துரை (36),கே.எம்.ரவி (36), பி.ஓ.வி.மாணிக்கம், தெய்வேந்திரன் (40), செந்தில் (30).

8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிக்கையில்அவர் கூறியுள்ளார்.

இவர்கள் திமுகவினரா? அழகிரி ஆதரவாளர்களா என்ற விவரங்கள் அவரது அறிக்கையில் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X