இதோ செட்டியார்கள் கட்சி உதயம்!
கோவை:
செட்டியார்கள் பேரவையும் தனிக் கட்சி விரைவில் தொடங்கவுள்ளனர்.
செப்டம்பர் 24-ம் தேதி திருச்சியில் செட்டியார் பேரவையின் மாநிலத் தலைவர் வி.எஸ்பழனியப்பன் தலைமையில் பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலம் முழுவதிலும் உள்ள பேரவையின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பேரவையின் சார்பாக கோவை, திருப்பூர் ஆகிய பகுதிநிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளை நர்வாகிகள் இது குறித்து தங்களது சிறு கிளைகளுக்கு ஒரு சுற்றறிக்கைஅனுப்பியுள்ளனர். இந்த அறிக்கையில், செட்டியார் பேரவை தனிக் கட்சிதொடங்குவது குறித்து விளக்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிற்காகப்பாடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், செட்டியார் பேரவையின் பொதுக் குழுக் கூட்டத்தில், தனிக் கட்சிக்கானபெயர், கொடி, சின்னம் ஆகியவை முடிவு செய்யப்படுவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் கொடி வர்ணக் கொடியாக இருக்கும் எனவும், மேல் பகுதி மஞ்சள்நிறமாகவும், நடுப் பகுதி வெள்ளையும், கீழ்ப் பகுதியில் பச்சை நிறமும் இடம் பெறும்என நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிச் சங்கங்களும் அரசியல் கட்சியின் போர்வையைபோர்த்திக் கொள்ளத் தயாராகி விட்டன. ஒரு ஜாதிக்கு ஒரு எம்.எல்.ஏ என்ற நிலைவிரைவில் ஏற்படப் போகிறது. இந்நிலையில் செட்டியார்கள் துவங்கும் இந்தக் கட்சிதேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.