அழகிரி குறித்து பேச விரும்பவில்லை .. கருணாநிதி
சென்னை:
அழகிரி விவகாரம் திமுக உட்கட்சி விவகாரம். அதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதுரையில் அழகிரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உட் கட்சி விவகாரம் அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.
மேற்கு வங்க மாநில அரசு சட்ட ஒழூங்கு குறித்து மத்திய அரசு ஆய்வறிக்கை அளிப்பதாக கூறிவருகிறது. அந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும் சட்டம்- ஒழூங்கு பாதிக்கப்படவில்லை.
நாங்கள் 356-வது ஷரத்தை முழுவதுமாக எதிர்க்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த ஷரத்து இருக்கட்டும், அதை பயன்படுத்துவது பற்றிமட்டும் யோசிக்க வேண்டும் என்ற கருத்து கொண்டது. இது குறித்து நான் முன்பு ஜோதிபாசுவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மேற்கு வங்க அரசுக்கு எதிராக 356- வது விதியை மத்திய பயன்படுத்தினால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஆனால் மத்திய அரசு அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறவில்லை.
பேப்பர் விலை உயரும் போது பத்திரிக்கை விலை உயர்வது போலத்தான் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை உயரும் போது பெட்ரோலியப்பொருட்கள் விலையும் உயரும்.
த.மா.கா. உறவு குறித்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் பேட்டியில் கூறினார்.












Click it and Unblock the Notifications