For Daily Alerts
Just In
ஏவுகணைக் குவிப்பில் இறங்குகிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஷாஹீன்-1 ரக ஏவுகணைகளை அதிக அளவில் தயாரிக்க பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிக்கையில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப்பொருத்தக் கூடிய ஷாஹீன்-1 ரக குறுகிய தூர ஏவுகணைகளை அதிக அளவில்தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளை கார்கில் மோதலின்போது பாகிஸ்தான் அதிக அளவுபயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
600 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய இந்த ஏவுகணையை தேசிய வளர்ச்சிக்காம்ப்ளக்ஸ் தயாரித்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஏவுகணைசோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்தியாவின் மும்பை நகரத்தைத் தாக்கக் கூடிய வல்லமை இந்த ஏவுகணைக்கு உண்டுஎன்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
Story first published: Saturday, September 23, 2000, 5:30 [IST]