எனது கணவரை விட்டு விடுங்கள் அண்ணா!
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள்ராஜ்குமாரை விரைவில் விடுதலை செய்யுமாறு வீர்பபனுக்கு ரேடியோ மூலமாகவேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு அவரது மனைவியும், மகன்களும்அவரை விடுதலை செய்யக் கோரி வீரப்பனுக்கு ரேடியோ மூலம் வேண்டுகோள்விடுத்து வருகின்றனர்.
உடல் நலக் குறைவு காரணமாக பர்வதம்மாள் மல்லய்யா ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுளார். அங்கிருந்து அவர் ரேடியோ மூலம் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், நான் உங்கள் தங்கை போல. விரைவில் என் கணவரையும், மற்றவர்களையும்விடுதவை செய்யுங்கள் என நான் பல முறை திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள்கருணை காட்ட மறுக்கிறீர்கள்.
நாங்கள் எல்லோரும் துக்கத்தில் இருக்கிறோம், எனக்கு ஏற்பட்டுள்ள நிலையைஎண்ணிப் பாருங்கள் இனியாவகது என் கணவரையும், மற்றவர்களையும் எங்களிடம்அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.
ரேடியோ மூலம் அவர் தனது கணவருக்கும். தம்பி கோவிந்துக்கும் செய்தி அனுப்பிஉள்ளார். ரேடியோ மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ராஜ்குமாருக்கு ...
எனக்கு லேசாக ரத்த அழுத்தம் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுஓய்வெடுத்து வருகிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன் என்னை பற்றி கவலைப்படவேண்டாம். 2 அல்லது 3 நாட்களில் பரிபூரண குணம் அடைந்து விடுவேன்.
உங்களோடு பேசி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. உங்களைப் பிரிந்தும் அதிகநாட்கள் ஆகி விட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
என் உடல் நிலை குறித்து பல வதந்திகள் கிளம்பின. நீங்கள் கவலைப்படுவீர்கள்எனவே நான் ரேடியோ மூலம் இந்தத் தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
தம்பி கோவிந்துக்கு ...
நான் நலமாகவே இருக்கிறேன். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நீமாத்திரைகளை சாப்பிட்டு கவனமாக இரு என்று கூறியிருந்தார் பர்வதம்மா.
பர்வதம்மாவின் பேச்சு ரேடியோவில் திரும்ப, திரும்ப பல முறை ஒலி பரப்பப்பட்டது.