கம்ப்யூட்டர் ஹேக்கிங்: 16 வயது அமெரிக்க சிறுவன் கைது
வாஷிங்டன்:
அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் உள்ள கம்ப்யூட்டர்களில்இன்டர்நெட் மூலம் முறைகேடு செய்ததாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு 6மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜொனாதன் ஜேம்ஸ் என்ற அந்த சிறுவன் பென்டகனிலுள்ள கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ரகசிய பைல்களில் முறைகேடுகள் செய்ததாக புகார்கூறப்பட்டது. பென்டகனுக்கு வந்த 3000 இ மெயில்களை ஜேம்ஸ், வழிமறித்துப்பார்த்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதவிர, பாதுகாப்பு ஆய்வகமான நாசாவிலுள்ள 13 கம்ப்யூட்டர்களையும் ஜேம்ஸ்திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர்களில் சர்வதேச விண்வெளிநிலையம் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன.
மியாமியிலுள்ள தனது வீட்டில் உள்ள 266 ரக பென்டியம் பெர்சனல் கம்ப்யூட்டர்மூலம் இந்த மோசடியில் ஜேம்ஸ் ஈடுபட்டுள்ளார். கம்ப்யூட்டர் ஹேக்கிங்குக்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் சிறுவன் ஜேம்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications