காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பிர் பஞ்சல் காட்டுப் பகுதியில் 9 தீவிரவாதிகளை ராணுவவீரர்கள் வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொன்றனர்.
இமயமலைப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்த இந்த சண்டையின்இறுதியில், 9 தீவிரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த வாரம் முதல் தீவிரவாதிகளை மறைவிடத்திலிருந்து தேடும் பணியில் ராணுவம்ஈடுபட்டுள்ளது. இதில் இதுவரை 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காகா மலைப் பகுதியில் 5 தீவிரவாதிகளும், மூன்று தீவிரவாதிகள் பெக்ராம் காலாபகுதியிலும், மஜோகிரி பகுதியில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தீவிரவாதிகள் ஜம்மு பகுதியிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளசுரண்கோட் என்ற பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள்அனைவரும் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 5 தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள். ஜெய்ஸ் இ முகமது என்றுஅமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் விமானக் கடத்தலின்போது விடுதலை செய்யப்பட்ட மவுலானா மசூத் என்பவருடையதாகும் என ராணுவஅதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கன்னா நிருபர்களிடம் தெரிவிக்கையில்தீவிரவாதிகள் அதிகபட்சமான ஆதரவை பாகிஸ்தான் ராணுவத்தினரிடமிருந்தும்பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்தும் பெறுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications