தமிழக மீனவர்களை சுடாதீர்கள் ..இலங்கைக்கு இந்தியா கோரிக்கை
டெல்லி:
இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் செல்லும் இந்திய மீனவர்களை சுட்டுக்கொல்லக் கூடாது என்று இலங்கையை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நிதிஷ் குமார், இலங்கை கலை மற்றும் மதவிவகாரத்துறை அமைச்சர் லட்சுமண் ஜெயக்கொடி உள்படஇலங்கை உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்சனை குறித்து இந்தசந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திசை மாறி இலங்கை கடற்படையினர்பிடித்து வைத்துவிடுகிறது. அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியே விடுவதில்லை. இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் சீல் வைக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சில நேரங்களில் சுட்டுக்கொல்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேல் நடக்கக் கூடாது. கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை தாமதிக்கக் கூடாது என்றுவேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், இந்திய கடற்படை வீரர்களால் பிடித்து வைக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா ஒத்துக் கொண்டது குறித்து இலங்கை அரசுமகிழ்ச்சி தெரிவித்தது. இதே போல் 7 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது குறித்தும் இந்தியா மகிழ்ச்சி தெரிவித்தது.
இந்திய மற்றும் இலங்கை அரசு மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆராய கமிட்டி ஒன்று அமைக்கவும் இந்த விவாதத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications