தடையை மீறிய 1000 விவசாயிகள் கைது
சென்னை:
தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டட 1000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். கல்வீச்சில்இறங்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம்நடத்தப்பட்டது.
வேளாண் விளைபொருட்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், விவசாய துறைக்குமானியத்தை அதிகரிக்க வேண்டும், கரும்பு பாக்கத் தொகை வழங்கப்படும் வரை விவசாயிகளின் கடன் மற்றும்வரி பாக்கிகளுக்கு கெடுபிடி செய்யக் கூடாது என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல்போராட்டம் நடந்தது.
சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகே திங்கள் கிழமை காலை விவசாயிகள் மறியல் நடத்தமுயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்டசலசலப்பில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். 10 போலீசார் கல்வீச்சில் காயம்பட்டனர்.
பின்னர் போலீஸ் படை விரைந்து வந்து மறியல் நடத்திய விவசாயிகள் அனைவரையும் கூண்டோடு கைதுசெய்தனர்.