திருச்சியில் சாலை மறியல் ... 102 கம்யூ. தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அண்ணாசிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 102 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் பெண்கள்.
தங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டனர்.
கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் கூறுகையில், எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், அரசின் கவனத்தைஈர்ப்பதற்காகவும்தான் இது போன்ற சாலைமறியலில் ஈடுபட்டோம் என்றார்.
திருச்சியில் மணப்பாறை, திருவெறும்பூர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications