அழகிரி மீதான நடவடிக்கையைக் கைவிடுகிறது திமுக
சென்னை:
திமுக உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வருகிறது. அழகிரி மீது எடுக்கப்பட்ட "ஒதுக்கல்நடவடிக்கையை கைவிட திமுக தலைமை முன்வந்துள்ளதாக தெரிகிறது.
முதல்வரின் மகன் அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறிஅவருடன் கட்சித் தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனகடந்த வாரம் கட்சித் தலைமை அறிவித்தது.
இதையடுத்து அழகிரி ஆதரவாளர்கள் பஸ் எரிப்பு, மறியல், கடையடைப்பு எனபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிதென்மாவட்ட திமுக எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட நிர்வாகிகள் அழகிரிக்கு ஆதரவுதெரிவித்தனர். அவரை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாடு என்று பார்த்தால் தென் மாவட்ட திமுகவினர்ஏராளமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். அப்படி செய்தால்,அந்த மாவட்டங்களில் திமுக கூடாரம் காலியாகி விடும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அழகிரியுடன் சமரசம் பேச திமுக தலைமை முன் வந்தது. அழகிரியின்ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முதல்வர்கருணாநிதியின் "நிழல் என்று வர்ணிக்கப்படும் அமைச்சர் ஆற்காடு வீராசாமிஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
இன்னொரு பக்கம் குடும்பத் தலைவி என்ற முறையில் முதல்வரின் மனைவி தயாளுஅம்மையார் மதுரை வந்து அழகிரியை சமாதானப்படுத்தினார்.
இந்த முயற்சிகளின் பலனாக அழகிரியின் கோபம் தணிந்துள்ளதாக மதுரை திமுகவட்டாரம் தெரிவித்தது. அழகிரி மீதான நடவடிக்கையை கைவிட திமுக தலைமைதயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications