லாரிகள் மோதலில் 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
நாமக்கல் அருகே நடந்த விபத்தில் 3 பேர் இறந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் அருகே உள்ள எருமாபட்டி என்ற இடத்திலிருந்து கபிலர் மலைக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதேசமயம், கரூரிலிருந்து நாமகிரிப்பேட்டைக்கு ஒரு லாரியில் கூலித் தொழிலாளிகள் வந்து கொண்டிருந்தனர். இரண்டு லாரிகளும் பரமத்தி அருகே உள்ள காவேரிப்பட்டி என்ற இடத்தில்மோதிக் கொண்டன.
இதில் லாரியில் பயணம் செய்த 3 பேர் இறந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications