சென்னையில் 2 இலங்கை தமிழர்கள் கைது
சென்னை:
சென்னையில் 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் செல்போன் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சிவகுமார், கிளிநொச்சியைச் சேர்ந்த ரவி ரவீந்திர ராஜா ஆகிய இரு இலங்கை தமிழர்களும், சென்னைதிருவல்லிக்கேணி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் குறித்து க்யூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். அப்போதுதிருவல்லிக்கேணி வாலாஜா ரோடு, பெல்ஸ் ரோடு சந்திப்பில் ஒருவரும், திருவல்லிக்கேணி ரத்னா கபே பகுதியில் மற்றொருவரும் பிடிபட்டனர்.
விசாரணையில் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயலில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications