For Daily Alerts
Just In
கல் குவாரியில் குண்டு வெடித்து பெண் பலி
மதுரை:
கல் குவாரியில் வைத்த குண்டுக்கு பெண் ஒருவர் பலியானார்.
மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் யானைமலைகல்குவாரி உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்து பாறைகளை தகர்த்து வந்தனர்.
திங்கள் கிழமை காலை கல் உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.பாறைகளை உடைக்க வைத்த குண்டு ஒன்று திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.இதில் சிதறிய பாறை ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது விழுந்தது.
அதில் ஒரு இளம்பெண் பலத்த காயமடைந்து இறந்தார்.
Comments
Story first published: Monday, September 25, 2000, 5:30 [IST]