செக்ஸ் மோசடி: கைதானார் உகாண்டா நாட்டு நீச்சல் வீரர்
சிட்னி:
இளம் பெண்ணிடம் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக உகாண்டா நாட்டின் நீச்சல் வீரர்கைது செய்யப்பட்டார்.
சிட்னியில் தற்போது 27-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்கலந்து கொள்ள 199 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்,வீராங்கனைகள் வந்துள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக சிட்னியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகில் உள்ள லிட்கோம்பே என்ற இடத்தில்17 வயது இளம் பெண் செக்ஸ் மோசடிக்கு உள்ளானார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு விளையாட்டுவீரர்தான் தன்னிடம் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக அப் பெண் புகார் கொடுத்தார்.கடந்த புதன்கிழமை இச் சம்பவம் நடந்தது.
இதையடுத்து அந்த விளையாட்டு வீரரைக் கண்டுபிடித்து கைது செய்யும்நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். இந் நிலையில், அந்த செக்ஸ் மோசடியில்ஈடுபட்டது உகாண்டா நாட்டு வீரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அவரைப் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அவர்அடிலெய்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்துசென்று உகாண்டா நாட்டு நீச்சல் வீரர் ஜோ அதுஹேரே என்ற அந்த நபரைக் கைதுசெய்தனர்.
யு.என்.ஐ.