For Daily Alerts
Just In
மதுரையில் 3 விபத்துக்களில் 6 பேர் சாவு
மதுரை:
மதுரை மாவட்டத்தில் 24 மணி நேரங்களில் நடந்த மூன்று சாலை விபத்துக்களில் 6பேர் உயிரிழந்தனர்.
திங்கள்கிவமை அதிகாலை ஐராவத நல்லூர் என்ற இடத்தில் மாருதி வேனும், லாரியும்மோதிக் கொண்டன. இதில் வேனில் பயணம் செய்த 2 பேர் கொல்லப்பட்டனர். மூன்றுபேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற இரு விபத்துக்களும் மதுரை நகரில் நடந்துள்ளன. இரு விபத்துக்களிலும் அரசுபஸ்கள் மோதி 4 பேர் இறந்தனர். அனைவருக்கும் 25 வயதுக்குள் இருக்கும்.மோட்டார் சைக்கிள்களில் போனபோது அரசு பஸ்கள் மோதி இறந்தனர்.
இந்த இரு விபத்துக்களும் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, October 2, 2000, 5:30 [IST]