இலங்கையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - 10ம் தேதி வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம்முடிவடைந்தது. செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வ காணவும் புதிய அரசை அமைக்கவும் இலங்கைநாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடந்த ஆகஸ்ட் மாதம் கலைத்தார்.

அதன் பிறகு தேர்தல் நடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் 10-ம்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல்நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.

கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டன. திங்கள்கிழமையும் இப் பிரசாரம் ஓய்ந்தது.

இப்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கும்,முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கும்தான் கடுமையான போட்டிநிலவும் என்று கருதப்படுகிறது.

இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாகஈடுபட்டுள்ளன. அதனால், இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறிதங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தரும்படி கோரி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+