பெட்ரோல் விலை உயர்வு: அக்.13-ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரி தொழிற்சங்கங்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வரும் 13 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின்விலையை உயர்த்தியது.

இதை எதிர்த்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா ஆகியோர் ராஜினாமா செய்தனர். பின்னர்விலை உயர்வு குறித்து மூட்டுவலி அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியளித்ததையடுத்து மம்தாபானர்ஜி தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக இடது சாரிக் கட்சி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. அகில இந்திய வர்த்த ஐக்கியசங்கம், இந்திய வர்த்த சம்மேளனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஹிந்த் மஸ்தூர் சபா ஆகிய கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணெய்விலை உயர்வைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த விலை உயர்வு தேவையில்லாதது. மத்திய அரசு வேண்டுமென்றேபெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களுக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போராட்டம் அக்டோபர் 13 ம் தேதி நடக்கும். இந்தப் போராட்டத்தையொட்டி, பேரணி மற்றும் ஊர்வலங்கள நடத்துவோம். ஆனால் அதேநேரம் எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் எதையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் உத்தேசம் ஏதுமில்லை என்றார்.ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+