மாருதி கார் விலை அதிகரிப்பு
மும்பை:
மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி கார்களின் விலையை ரூ 3,500 முதல் 4,500 வரை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
மாருதி உத்யோக் நிறுவனம் பல வகையான மாருதி கார்களை தயாரித்துவரும் நிறுவனமாகும். பெருகி வரும் உற்பத்திப் பொருட்களின் விலையால் மாருதிகார்களின் விலையை அதிகரிப்பதாக மாருதி உத்யோக் நிறவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், மாருதி வேகன்-ஆரின் விலையும், ஜிப்சி மற்றும் அல்டோ காரின் விலையும் அதிகரிக்கப்படவில்லை.
மாருதி உத்யோக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலேயே விலையைஅதிகரிததுள்ளோம் என்றார்.
விலை உ.யர்வையடுத்து தற்போது மாருதி கார்களின் விலை விவரம்:
சொகுசுக் காரான பாலேனோவின் விலைதான் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை 22,000 ரூபாய் உயர்ந்து 7,49,000 ரூபாயாகஆகியுள்ளது.
மாருதி ஜென் டீசல் காரின் விலை 10, 000 ரூபாய் அதிகமாகி உள்ளது.
மாருதி 800-ன் விலை 3,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 2,15,000 ரூபாயாக ஆகியுள்ளது.
மாருதி -800 இஎக்ஸ்-ன் விலை 4,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 2,46,000 ரூபாயாக ஆகியுள்ளது.
மாருதி-800 டிஎக்ஸ்-ன் விலை அ திகரிக்கப்பட்ட புதிய விலை 2,64,000 ரூராய் ஆகும்.
மாருதி ஜென் எல்எக்ஸ்-ன் விலை 3,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 3,43,000 ரூபாயாக இருக்கும், மாருதி ஜென் டீசல் காரின் விலை393,000 ரூபாயாக இருக்கும்.
மாருதி ஜென் விஎக்ஸ், விஎக்ஸ்ஐ, ஏடி மற்றும் கிளாசிக்கின் கார்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.
மாருதி ஆம்னியில் 5 பேர் உட்கார்ந்து செல்லும் காரின் விலை 2,150 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 பேர் உட்கார்ந்து செல்லும் காரின் விலை 2,060ரூபாய் அதிகரித்துள்ளது.
மாருதி ஈஸ்டர்ன் எல்எக்ஸ்-ன் விலை 3,000 அதிகரிக்கப்பட்டு அதன் விலை 5,02,000 ரூபாயாக இருக்கும்.
மாருதி நிறுவன் ஜூலை மாதம் விற்பனையை அதிகரிக்க எம்800, ஆம்னி மற்றும் வாகன்-ஆரின் விலையை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications