லாரி உரிமையாளர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம்
ஏற்காடு:
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஏற்காடு ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் அரங்கில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக்கூட்டம், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ப.செங்கோடன் தலைமைதாங்கினார்.
கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடக்கும். சென்னை அண்ணாநகர் வளைவு அருகில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கும்.
எங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனுக் கொடுக்கப்படும் என்றார் செங்கோடன்.












Click it and Unblock the Notifications