நவம்பரில் சட்டமன்றம் கூடுகிறது: பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
சென்னை:
தமிழக சட்டசபை நவம்பர் 6ம் தேதி கூடுகிறது. இவ்வாண்டின் இறுதிக் கூட்டத் தொடர் இது.
இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பாத்திமா பீவி புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.
மழைக் காலக் கூட்டத் தொடரான இது ஒரு வார காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இவ்வாண்டின் இறுதிக் கூட்டத் தொடர் என்பதாலும், அடுத்தாண்டில் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் இந்ததொடரில் பல்வேறுத் திட்டங்களுக்கான அறிவிப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது.
ஆளும் திமுக அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு மார்ச்சில் முடிகிறது. அதற்கு முன்பு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிசாதனைப் பட்டியலோடு மக்களை சந்திக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்த மழைக் காலக் கூட்டத் தொடரை அதற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆளும் கட்சி செயல்படும். ஆனால்,டான்சி விவகாரம், பெட்ரோல் டீசல் சமையல் வாயு விலை உயர்வு, அழகிரி விவகாரம் போன்ற பிரச்னைகளை கிளப்பி மக்கள்கவனத்தை ஈர்க்க எதிர்க்கட்சிகள் முனையும்.
எனவே இந்த கூட்டத் தொடர் மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.