ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வெடிகுண்டு புரளி
சென்னை:
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வெடி குண்டு வைக்கப்பட்டிப்பதாக தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 11.30 மணிக்கு கல்லூரி அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கல்லூரியின் பல அறைகளிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை எந்த நேரத்திலும்வெடிக்கலாம் எனக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசாரும், பாம் ஸ்குவாட்சிறப்புப் பிரிவினரும் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். குண்டுகளைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்ப் படைகளும்வந்தன.
மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றினர். ஸ்டெல்லா மேரீஸ் வாசலில் மாணவிகள் கூட்டம்.இதையடுத்து அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
போலீசாரும், மோப்ப நாய்ப் படையும் கல்லூரியை சோதனையிட்டனர். ஆனால், குணடு ஏதும் கிடைக்கவில்லை.அது புரளி என்று தெரியவந்த பின்னர் தான் போலீசாரும் மாணவிகளும மூச்சுவிட்டனர்.