தமிழகத்தையே நம்பியிருக்கிறோம் .. கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும் குறைவுதான்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

ராஜ்குமார் கடத்தப்பட்டு 75 நாட்களாகிவிட்டன. அவரை மீட்கும் விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும்குறைவுதான். இருப்பினும் அவரை மீட்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு எடுத்து வருகிறது.

இப்போது ராஜ்குமார் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். அதனால் அவரை மீட்பதில்கர்நாடகம், தமிழக அரசை நம்பியிருக்கிறது.

ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் மத்திய அரசும் தனது கடமையைச் செய்து வருகிறது என்றார் முதல்வர் கிருஷ்ணா.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு: கார்கே கருத்து

இதற்கிடையே, சுப்ரீம்கோர்ட் உத்தரவால் நடிகர் ராஜ்குமார் விடுதலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றுகர்நாடக காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட் 5 வது முறையாக அரசுத்தூதர் நக்கீரன்கோபால் உள்பட 4 பேர் காட்டுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்து விட்டது. விரைவில் அவர்கள் வீரப்பனுடன் பேச்சுவார்த்தைநடத்துவார்கள். தடா கைதிகள் விடுதலை குறித்த வழக்கை சுப்ரீம்கோர்ட் 17 ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்கு விவரம் குறித்து அவர்கள் வீரப்பனுக்கு எடுத்துக் கூறுவார்கள். மனிதாபிமானமுறையில் தூதுக்குழுவினர் வீரப்பனின் மனதை மாற்றுவார்கள். இந்தமுறை பேச்சுவார்த்தை கண்டிப்பாகவெற்றியில் முடியும்.

ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பேச்சுவார்த்தைதான் மிகச்சிறந்த வழி என்று இரு மாநில அரசும் திடமாக நம்புகிறதுஎன்றார் கார்கே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+