சிறுபான்மை கூட்டணி அரசு அமைக்கத் தயாராகிறது சந்திரிகா கட்சி
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சி, நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தனிப் பெரும்கட்சியாக வந்துள்ளது. சிறுபான்மை அரசு அமைக்க அது தயாராகி வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தேர்தல்கமிஷனர் தயானந்த திசநாயகே முடிவுகளை அறிவித்தார்.
மக்கள் கூட்டணிக் கட்சி இத்தேர்தலில் 107 இடங்களைப் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.பி.க்களின்ஆதரவே தேவைப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி 89 இடங்களைப் பெற்றுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுனா 10 இடங்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 5 இடங்களையும், தேசியஐக்கியக் கூட்டணி 4 இடங்களையும், ஈழம் மக்கள் ஜனநாயகக் கூட்டணி 4 இடங்களையும் பெற்றுள்ளது.
மேலும், தமிழ் ஈழம் விடுதலை அமைப்பு 3 இடங்களையும், சிங்கள உருமாயா, சிலோன் தமிழ் காங்கிரஸ், சுயேச்சைகட்சிகள் தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.