ஒலிம்பிக் மல்யுத்த வீரரின் பதக்கம் பறிபோகிறது
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்போதை மருந்து உட்கொண்டது சோதனையில் தெரிய வந்துள்ளதால் அவரது பதக்கம்பறிக்கப்படும் என்று தெரிகிறது.
சிட்னியில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 2 வீரர்கள்போதை மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் பதக்கப் பிரிவுஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றவர்.மற்றவர் பதக்கம் ஏதும் வெல்லாதவர். பதக்கம் வென்றவரின் தங்கப் பதக்கம் பறிமுதல்செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சோதனை நிரூபிக்கப்பட்டவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஒலிம்பிக்மல்யுத்தப் போட்டியில், பிரீஸ்டைல் பிரிவில் மொத்தம் எட்டு தங்கப் பதக்கங்கள்வழங்கப்பட்டன. இதில் ரஷியா 4 பதக்கங்கள் வென்றது. பிற பதக்கங்களைஅஜர்பைஜான், ஈரான், ஜெர்மனி, கனடா வீரர்கள் வென்றனர்.
இந்தப் பிரச்சினை குறித்து சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லாசேன் நகரில் சர்வதேசஒலிம்பிக் கமிட்டி மருத்துவ கமிஷனில் விசாரணை நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications