தமிழகத்தில் மேலும் 82 பாலங்கள்
காஞ்சிபுரம்:
தமிழ்நாட்டில் மேலும் 82 பாலங்கள் கட்ட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகநெடுஞ்சாலை துறை அமைச்சர் தா. கிருஷ்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கம், ஒட்டியப்பாக்கம் சாலையில் 1 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் திறப்புவிழா நெடுஞ்சாலைமற்றும் துறைமுகத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
புதிய பாலத்தை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். விழாவில் பேசியநெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், இங்கே புதிதாக கட்டப்பட்டுள்ளபாலம் இப்பகுதியை சார்ந்தவர்களுக்கு நீண்ட நாளைய ஏக்கம். இப்போது உங்கள்ஏக்கம் தீர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மக்களின் தேவையை குறிப்பாக கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்திசெய்வதில் முழு மூச்சோடு, முனைப்போடு செயல்படுகிறது.
தமிழக முதல்வர் பொதுமக்களின் தேவைகளை நன்கு உணர்நதவர். பொதுமக்கள்சொல்லித்தான் என்பதில்லை சொல்லாததையும் செய்வார். கடந்த நான்கரைஆண்டுகளில் கலைஞர்ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் 495 ஆகும். மேலும் 82புதிய பாலங்களை தமிழகத்தில் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று பேசினார்அமைச்சர் கிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications