ஆந்திரா, ஒரிஸ்ஸாவை புயல் தாக்கும் அபாயம்
புவனேஸ்வர்:
வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால், ஆந்திா, ஒரிஸ்ஸாவில் புயல் வீசும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை மசூலிப்பட்டிணத்திலிருந்து 500 கி.மீ. கிழக்காக இந்த புயல் சின்னம் மையம் கொண்டிருந்தது. இதுதொடர்ந்து ஆந்திர, ஒரிஸ்ஸா கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் இந்த இரு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளிலும், உள் பகுதிகளிலும் பலத்த புயல் காற்றுவீசக்கூடும். காற்றின் வேகம் 70-75 கி.மீ. வரை இருக்கும்.
இதையடுத்து ஆந்திராவிலும் ஒரிஸ்ஸாவிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகத்தைக் குறிக்கும்இரண்டாம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கடலில் அலைகள் மிகக் கடுமையாக இருப்பதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களை இரு மாநில அரசுகளும்எச்சரித்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயர் அதிகாரிகளுடன் புயல் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரிஸ்ஸாவிலும் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரிஸ்ஸாவை கடந்த சில மாதங்களுக்கு முன்தாக்கிய புயலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாதிப்பில் இருந்தே அம் மாநிலம்இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந் நிலையில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருப்பது மக்களை கலவரப்படுத்தியுள்ளது.