கருணாநிதியிடம் குவிந்த முதல்வர் நிவாரண நிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் பொது நிவாரண நிதிக்குதிங்கள் கிழமை மட்டும் 19 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்களும், வணிக பெருமக்களும்,செல்வந்தர்களும் ஏனைய ஆர்வமுடையோரும் தாராளமாக நிதியை வாரி வழங்கிடஅண்மையில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, பொள்ளாச்சிசக்தி குரூப் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ந.மகாலிங்கம் 10 லட்ச ரூபாய்க்கானகாசோலைகளையும், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவரும் சத்தியபாமாபொறியியல் கல்லூரி நிறுவனருமான ஜேப்பியார் 5 லட்ச ரூபாய்க்கானகாசோலையையும், எம்ஜிஎம் நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.எம்.முத்து 3 லட்சரூபாய்க்கான காசோலையையும், ஏ.வி.எம். நிறுவனங்களின் சார்பில்ஏ.வி.எம்.சரவணன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர்கருணாநிதியிடம் திங்கள் கிழமை வழங்கினர்.












Click it and Unblock the Notifications