For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடத்தப்பட்ட விமானம் பத்திரமாக செளதி திரும்பியது

By Staff
Google Oneindia Tamil News

நிகோசியா:

வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட செளதி விமானம் திங்கள்கிழமை அதிகாலை 1 மணி அளவில்ரியாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

செளதியில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த இந்த விமானம் எகிப்தின் மேல் பறந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டது. கடத்தல்காரர்கள் விமானத்தை இராக்கில் தரையிரக்கக்கூறியதைத் தொடர்ந்து அது பாக்தாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

விமானத்தைக் கடத்திய 4 பேரும் செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இராக்கில்அரசியல் தஞ்சம் கேட்டு விமானத்தைக் கடத்தியதாகக் கூறினர். அவர்களின் கோரிக்கையைபரிசீலிப்பதாக இராக் கூறியதையடுத்து அவர்கள் 3 மணி நேரத்தில் விமானக் கடத்தலைக் கைவிட்டுசரணடைந்தனர்.

விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இதில் செளதி அரசர்ஃபாதின் உறவினரான இளவரசர் ஒருவரும் பயணம் செய்தார்.

கடத்தப்பட்ட பயணிகள் அனைவரும் அதே விமானத்திலேயே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்செளதி திரும்பினர். அவர்களை துணை பாதுகாப்பு அமைச்சர் எமிர் அப்துல் ரஹ்மான் அப்துல்அஜீஸ், உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சர் எமிர் நயேஃவ் அப்துல் அஜிசும் மற்றும் பலஅமைச்சர்களும் வரவேற்றனர்.

யு.என். ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X