தேனி அருகே காட்டுக்குள் துப்பாகிச் சூடு - 2 பேர் பலி
மதுரை:
தேனி அருகே சந்தன மரக்கடத்தல் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இரண்டு பேர்பலியானார்கள்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு உள்ள வண்ணாத்திப்பாறைஅருகே பந்தல் ராஜா ஓடை என்கிற இடம் இருக்கிறது.
அந்தப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்திவந்தது.வனத்துறை அதிகாரிகளும் முழு பலத்தோடு கடத்தல் கும்பலை தடுக்க முயன்று வருகின்றனர்.
நேற்று பந்தல் ராஜா ஓடை பகுதியில் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு கும்பல் கோடாரியால் சந்தனமரங்களை வெட்டிக்கொண்டிருந்தது. இதைக்கண்டதும் அதிகாரிகள் அந்தக் கும்பலை சுற்றி வளைத்தனர்.
கடத்தல்காரர்கள் அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கடத்தல் கும்பல் மீதுதுப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் சுருண்டு விழுந்துஅதே இடத்தில் இறந்தனர்.
அவர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் ராமர், உடையான் இருவர் என்றும் இவர்கள்கூடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications