ஜெயிடமிருந்து அதிமுகவை விடுவிப்போம்: ஆர்.எம்.வீ.

Subscribe to Oneindia Tamil

சேலம்:

ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வுடன்கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி கட்சிகள் தங்களது நிலையை விளக்க வேண்டும் எனஎம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தெரிவித்தார்.

சேலத்தில் எம்.ஜி.ஆர்.,கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

அ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுநீதித்துறைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இது முடிவல்ல, மேல் முறையீடு செய்வோம்என பலர் கூறி வருகின்றனர்.

அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என இவர்கள் கருதி,ஜெயலலிதாவின் ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வருகின்றனர். மதவாத எதிர்ப்பு என்ற போலிவாதத்தைக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

மக்களும், நீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லும் எனக் கூறி வந்தவர்கள் இப்போது என்னசொல்கின்றனர்?. கடந்த 1996ம் ஆண்டு மக்கள் ஜெயலலிதாவைப் புறக்கணித்து தீர்ப்புக் கூறிவிட்டனர். நீதிமன்றமும் குற்றச்சாட்டில் தீர்ப்பளித்து விட்டது. இனி வரும் தர்தலிலும் அவர்புறக்கணிக்கப்படுவார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவரைக் கட்சியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுகுறித்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தொண்டர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.ஜெயலலிதாவிடமிருந்து அ.தி.மு.கவை அவர்கள் விடுவிக்க வேண்டும். அவர் தொடர்ந்துநீடித்தால், இவரது தலைமையை தொண்டர்கள் ஏற்காமல் எம்.ஜி.ஆர் கழகத்திற்குத் திரும்பவேண்டும்.

தொடர்ந்து இக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.அப்பீலுக்குச் செல்வதால் இன்னும் குற்றம் இறுதியாக நிரூபிக்கப்படவில்லை என இவர்கள் பேசிவருவது கேலிக் கூத்தாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+