ரூ. 50 லட்சம் மோசடி .. பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொதுமக்களிடம் சீட்டுப் பிடித்த பணத்தை அவர்களுக்குத் தராமல் தலைமறைவானபெண் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷேக் பஸலுதீன். சென்னை வேளச்சேரியில்வசித்து வரும் இவரும், இவரது மகனும் சேர்ந்து தலையணை மற்றும் மெத்தைவியாபாரம் செய்து வந்தனர்.

பஸலுதீனின் மனைவி பெயர் மெளம்லா பீவி. இவர் கடந்த 10 வருடங்களுக்கும்மேலாக அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் சீட்டுப் பிடித்து வந்தார். தீபாவளிசமயத்தின்போது அந்தப் பணத்தை இரண்டு மடங்காக திருப்பித் தருவதாக கூறி அவர்சீட்டுப் பிடித்து வந்தார்.

இதையடுத்து வேளச்சேரி மற்றும் பிற பகுதியை சேர்ந்த பலர் மெளம்லா பீவியிடம்பணம் கட்டி வந்தனர். தற்போது தீபாவளி நெருங்குவதால் பணத்தைத் திருப்பித்தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கிடைக்காததால் சிலர்போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று தக்க நடவடிக்கை எடுக்குமாறுவற்புறுத்தினர். இதையடுத்து போலீஸார் தங்களிடம் வந்த புகார் மனுக்களின்அடிப்படையில் மெளம்லா பீவியைக் கைது செய்தனர்.

மெளம்லா பீவியின் நடவடிக்கைக்கு அவரது மகன் நூர்ஜகானும் உடந்தை எனபோலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப்போலீஸார் தேடி வருகின்றனர். மெளம்லா பீவியின் கணவரும் தலைமறைவாகிவிட்டார். இவர்கள் மொத்தம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+