For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாசுக் கட்டுப்பாட்டு விதியை மீறினால் நடவடிக்கை.. அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீதுகடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடுமற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

திருப்பூரில் அகில இந்திய அளவிலான முதலாவது ஆயத்த ஆடைக் கண்காட்சிதுவங்கியது. இந்த விழாவில் ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கழகத்தின் தலைவர்கோயங்கோ, இணை இயக்குநர் சதுர்வேதி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவைத் துவக்கி வைத்து மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமி பேசியதாவது:

இந்தியாவின் ஏற்றுமதி 5 பில்லியன் டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தஏற்றுமதியில் திருப்பூர் பெரும்பங்கு வகிப்பது பெருமை தரக் கூடிய விஷயம்.சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்பவர்களில் 10 ஏற்றுமதியாளர்கள் இங்கு இருப்பதுபெருமை தரக் கூடிய விஷயமாக உள்ளது. தற்போது ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ளசூழ்நலை திருப்தி அளிப்பதாக உள்ளது.

திருப்பூரில் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் 50 கோடிரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துச் செயல்பட்டு வருகிறது.

சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம்தடுக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, கழிவு நீரையோ, சுற்றுச்சூழலையோ மாசுபடுத்தும் வகையில் எந்த நிறுவனம் செயல்பட்டாலும், கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு திருப்பூர் நகருக்குத் தேவையான வசதிகளைஏற்படுத்தித் தர முன் வந்துள்ளது. தமிழக அரசு இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு1200 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் வழங்கும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.இதற்கான துவக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார் என்றுபொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X