88 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் புழல் சிறப்பு இலங்கை அகதிகள் முகாமில்வைக்கப்பட்டுள்ள 88 அகதிகள் செவ்வாய்க்கிழமை முதல்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களை இலங்கைக்கு அனுப்பக் கோரி அவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். ராஜமாணிக்கம் (32) என்ற அகதி தனது மனைவியுடன்முதலில் உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அகதிகளை செங்கல்பட்டுஅகதிகள் முகாமிற்கு அனுப்ப வேண்டும் அல்லது இலங்கைக்கே திருப்பிஅனுப்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை கூறினார். பின்னர் புழல்முகாமிலுள்ள அனைத்து அகதிகளும் போராட்டத்தில் சேர்ந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு களைப்படைந்த 6அகதிகளுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை தரப்பட்டது. பின்னர் அவர்கள் முகாமுக்கே கொண்டுவரப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications