For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு வந்தால் திமுகவை அழிப்பேன் .. ஜெ.சூளுரை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2001-ல் ஆட்சியை கைப்பற்றுவேன். அப்புறம் 2 ஆண்டுகளில் திமுக என்றொரு கட்சிஇருக்குமா என்ற நிலையை ஏற்படுத்துவேன் என்று அதிமுக 29-வது ஆண்டு தொடக்கவிழாவில் ஜெயலலிதா சூளுரைத்தார்.

அதிமுக 29வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னையில் அக்கட்சி தலைமைஅலுவலகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஜெயலலிதாகட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அரசியல் காரணங்களுக்காக படுகொலைசெய்யப்பட்ட அதிமுக தொண்டர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தார்.

சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 52 ஜோடிகளுக்கு இலவசதிருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார்.

பின்னர் கட்சியினர் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது:

எதிரிகள் திகைக்கும் அளவுக்கு இங்கே தொண்டர்கள் திரண்டு வந்துள்ளீர்கள். சிலசதிகாரர்கள் செய்த சதியின் காரணமாக கிடைத்த தீர்ப்பினால் அதிமுக அழிந்து விடும்என்று நினைத்தவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியமாக அமையும்.

எத்தனை ஆயிரம் கருணாநிதிகள் வந்தாலும், எத்தனை ஆயிரம் சதிவேலைகளில்ஈடுபட்டாலும் கவலையில்லை. நமக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. நமதுவெற்றியை யாரும் தட்டிப் பறிக்க முடியாது.

எத்தனை ஆயிரம் சோதனைகள், வேதனைகள் வந்தாலும் என்னோடு இருக்கும்தொண்டர்கள் தான் எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த 5 ஆண்டுகளாக எத்தனையோதுயரங்களை அனுபவித்தேன். அதனால் வெளிநாட்டுக்கு ஓடி விடுவேன் என்று சிலர்கனவு கண்டார்கள். அது நடக்கவில்லை.

நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். கருணாநிதிக்கு சிம்மசொப்பணமாகஇருப்பேன். கருணாநிதியை ஓய்க்கும் வரை ஓயமாட்டேன். 2001ல் எம்ஜிஆர்ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். அந்த ஆட்சி மலர்ந்த 2 ஆண்டுகளில் திமுகஎன்றொரு கட்சி இருக்கிறதா என்று மக்கள் கேட்கும் வகையில் செயல்படுத்திகாட்டுவேன் என்றார் அவர்.

கட்சியின் மிக முக்கியமான இந்த விழாவில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினராகஜெயலலிதாவால் அதிரடியாக நியமிக்கப்பட்ட சசிகலா கலந்து கொள்ளவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X