For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ வாயுவினால் இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பொட்டனேரியில் விஷ வாயு தாக்கிப் பலியான 3 பேருடையஉறவினர்கள் நஷ்ட ஈடு வழங்கக் கோரி பிணத்தைப் பெற மறுத்து சாலை மறியலில்ஈடுபட்டனர்.

மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியில் கடந்த அக்டோபர் 16ம் தேதி சிஸ்கால் என்றதேனிரும்புத் தொழிற்சாலையில் பர்னசைத் திறந்த மூன்று தொழிலாளர்கள் விஷ வாயுதாக்கி இறந்தனர்.

இந்த விபத்தில் இறந்த மூன்று பேரின் சடலங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மூன்றுபேரின் உடல்களையும் அவரது உறவினர்கள் எடுத்துச் செல்ல முடிவானது.

அப்போது திடீரென தொழிலாளர்கள் உட்பட 200 பேர் பிணத்தை பெற மறுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும்தொழிற்சாலை அதிகாரிகள் அங்கு விரைந்து சமாதானப்படுத்தினர்.

இறந்தோரின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும்ஏற்கனவே அளிக்கப்பட்ட நிவாரணத் தொகையான 1.85 லட்ச ரூபாயுடன் கூடுதலாக 2லட்ச ரூபாய் நிதி அளிக்க வேண்டும் எனக் கோரினர்.

தொழிற்சாலை நிர்வாகம் 1.85 லட்சத்துடன் 15 ஆயிரம் சேர்த்து இரண்டு லட்சமாகவழங்குவதாக அறிவித்தது. ஆனால் இதை ஏற்க தொழிலாளர்கள் மறுத்து சாலைமறியலைக் கைவிட மறுத்தனர்.

இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்குத் தொழிற்சாலையில் வேலைபோட்டுத் தருவதாகவும், கூடுதலான நிவாரணத் தொகை குறித்து நிர்வாகக் குழுக்கூட்டத்தில் அனுமதி கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு மூவரின் உடலையும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X