நெடுமாறனுக்கு தொலைபேசியில் ராஜ்குமார் மனைவி நன்றி
சென்னை:
வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ள கோபால், நெடுமாறன்தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளும், மகன்சிவராஜ் குமாரும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக பேச்சு வார்த்தைநடத்தி விட்டு பழ. நெடுமாறன் மற்றும் கோபால் செவ்வாய்க்கிழமையன்று சென்னைதிரும்பினார்.
மீட்பு முயற்சி தொடர்பாக நெடுமாறன் குடும்பத்தினருடன் ராஜ்குமாரின் மனைவிதொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அவர் தொலைபேசியில்கூறியதாவது:
முன்பு எப்போதும் இருந்த நம்பிக்கையை விட எங்களுக்கு இப்போது நம்பிக்கைஅதிகமாக உள்ளது. நெடுமாறன் கண்டிப்பாக என் கணவரை மீட்டு வருவார் எனக்குநம்பிக்கை இருக்கிறது.
ஆனால் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் உடல்நிலை குறித்துஎனக்கு கவலையாக உள்ளது. அவர் எடுத்த முயற்சிக்கு நானும், எனது குடும்பத்தார்மட்டுமல்லாது கன்னட மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்என கூறினார். ராஜ்குமார் மகன் சிவராஜ்குமாரும் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications