For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கையில் மனித வெடிகுண்டுக்கு 2 பேர் பலி
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் டவுன் ஹால் பகுதியில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த மனித வெடிகுண்டுவெடித்ததில், 2 பேர் இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்தஇடத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில்தான், அதிபர் சந்திரிகாவின்அதிகாரப்பூர்வ அரசு மாளிகையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமக்கள் கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு நபர் குறித்து சந்தேகமடைந்தபோலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுஅந்த நபர் தன்னுடைய உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, October 19, 2000, 5:30 [IST]