For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவை அச்சுறுத்திய புயல் பலவீனமடைந்தது

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

ஆந்திராவை பயமுறுத்திக் கொண்டிருந்த புயல் பலவீனமடைந்தது.

வியாழக்கிழமை ஆந்திரக் கடலோரப் பகுதிகளில், புயல் கரையைக் கடக்கும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறுநடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் புயல் பலவீனமடைந்தது. தொடர்ந்து பலவீனமடைந்துவியாழக்கிழமை மாலைக்கு மேல் கரையைக் கடக்கும் என்று தற்போது வானிலைஆய்வு மையம் கூறியுள்ளது.

மசூலிப்பட்டினத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்கொண்டிருந்தது. மசூலிப்பட்டனம், நெல்லூருக்கு இடையே புயல் கரையைக் கடக்கும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலத் தலைமைச் செயலாளர் பி.வி.ராவ் கூறுகையில், ஆந்திராவை புயல் தாக்கும்அபாயம் இப்போது இல்லை என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X