ஜவுளி இறக்குமதி வரிக் குறைப்புக்கு தொழில் வர்த்தக சபை எதிர்ப்பு
கோவை:
ஜவுளி இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு இந்திய தொழில்வர்த்தக சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கோவையில் இந்திய தொழில் வர்த்தகக் கழகத்தின் தலைவர் ஏ.வி. வரதராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்கச் சுற்றுப் பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியைஅளித்தது. அமெரிக்காவுடன் உறவு மேம்பட்டதுடன், வர்த்தகமும் பெருகும் என்றநம்பிக்கை இருந்தது.
ஆனால் சமீபத்தில் நிதியமைச்சர் அறிவித்துள்ள இறக்குமதி வரி குறைப்புஅதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜவுளி இறக்குமதிக்கான இறக்குமதி வரி குறைப்புஇந்தியாவில் ஜவுளித் தொழில் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள ஜவுளித் தொழில் தற்போது தான் சிறிதளவுமுன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இறக்குமதி வரியை மத்திய அரசுகுறைத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஜவுளிப் பொருட்களைஇந்தியாவிற்குள் அதிக அளவு திணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஜவுளி இறக்குமதி மீதான வரியை தற்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.