ஊழியர்களை அடைத்து வைத்த ஊராட்சித் தலைவர்
அரியலூர்:
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களை புகைப்படம் எடுக்க மறுத்தஅதிகாரிகளை சிறை வைத்த ஊராட்சி மன்றத் தலைவரை போலீசார் கைதுசெய்தனர்.
அரியலூர் தாலுகா கீழப்பளூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த வெற்றியூர்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் வாக்களர்களைபுகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
அந்த சமயத்தில் த.மா.கா. வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கங்காதுரை அங்கு வந்து வாக்களார் பட்டியலில் இடம் பெறாதவர்களைபுகைப்படம் எடுக்குமாறு அங்கிருந்த அரசு அதிகாரிகளை கேட்டார். அதற்குஅவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த கங்கா துரை அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாசில்தார் கணேசன் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பணியாளர்களை அந்தஅறையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதுரையைகைது செய்தனர்.












Click it and Unblock the Notifications