ஷார்ஜா கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல்
ஷார்ஜா:
ஷார்ஜா சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஷார்ஜாவில்வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தொடங்குகிறது.
முதல் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. மூன்றாவது நாடாகஜிம்பாப்வே இப் போட்டியில் கலந்து கொள்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளை தலா இரு முறை எதிர்த்து விளையாடவேண்டும். முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 29-ம் தேதி நடைபெறும்இறுதி ஆட்டத்தில் மோதும்.
அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவு ஆட்டங்களாக நடத்தப்படும். ஷார்ஜாபோட்டிக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையும்,ஜிம்பாப்வேயும் இன்னும் தங்களது அணிகளை அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டஇந்திய அணியே இப் போட்டியிலும் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட விவரம்:
அக். 20 - இந்தியா / இலங்கை
அக்.21 - இலங்கை / ஜிம்பாப்வே
அக். 22 - இந்தியா / ஜிம்பாப்வே
அக். 25 - ஜிம்பாப்வே / இலங்கை
அக். 26 - இந்தியா / ஜிம்பாப்வே
அக். 27 - இந்தியா / இலங்கை
அக். 29 - இறுதி ஆட்டம்.












Click it and Unblock the Notifications