ஐக்கிய நாடுகள் சபையில் வைகோ
ஐக்கியநாடுகள்:
புத்தாயிரம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய சவால்களைசமாளிக்க ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த புத்தாயிரம் ஆண்டுசிறப்பு மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோபேசியுள்ளார்.
இந்தியாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில்ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார்.வைகோ பேசுகையில், புத்தாயிரம் ஆண்டு மற்றும் புது நூற்றாண்டுதுவக்கத்தில் ஐ.நா.சபை கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவேண்டியுள்ளது. எனவே ஐ.நா. செயல்பாடுகளில் ஒரூங்கிணைந்தசீர்திருத்தம் அவசியம். முக்கியமாக பொருளாதாரத்துறையில்சீர்திருத்தம் அவசியமானதாகும்.
ஐ.நா. சார்பில் அமைதிப்பணியை மேற்கொள்ளும் போது, அதற்குஆகக் கூடிய செலவுகளை ஐ.நா சபையும், அதில் சம்பந்தப்படும்நாடுகளும் பகிர்ந்து கொள்ளாமல் இழுத்தடிப்பது கூடாது.
அமைதிப் பணிக்காகச் செல்லும் படை வீரர்களுக்காக ஆகும்செலவுகள் மற்றும் கருவிகளுக்கான செலவுகள்தாமதப்படுத்தப்படாமல் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு ஐ.நா.சபையில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதி மொழிஎடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்துசெயல்பட்டு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினால் பலசீர்திருந்தங்களை செயல்படுத்தலாம்.
பல்வேறு நாடுகளிலில் அமைதிப் பணியில் ஈடுபட்டதற்காகஐ.நா.வுக்கு இரண்டு கோடி டாலர்கள் வரை பணம் வரவேண்டியிருக்கிறது. அவை ஒழுங்காக ஒப்படைக்கப்பட்டால்மட்டுமே அமைதிப்பணியில் ஈடுபடும் நாடுகள் பயன்பெறும்.
இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுக்கு ஐ.நா.விடமிருந்து தலா இரண்டுகோடி டாலர்கள் வர வேண்டியிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்புசோமாலியா,கம்போடியா நாடுகளுக்கு அமைதிப் பணிமேற்கொண்ட பிற நாட்டு ராணுவங்களுக்குக் கூட செலவினத்திற்கானபணம் வழங்கப்படவில்லை. சியாராலியோன் பிரச்னையிலும் இதேநிலை தான்..
ஐ.நா. சபை தொடர்ந்து அமைதிப்பணியை மேற்கொள்ளவேண்டுமென்றால் பொருளாதார நிலையில் வலுவாக இருக்கவேண்டியது அவசியமானதாகும். இதற்கு ஒருங்கிணைந்தபொருளாதார திட்டம் அமைக்கப்படாமல் போனால் இந்த சர்வதேசஅமைப்பு திவாலாகிப் போகும் நிலைதான் ஏற்படும்.
ஐ.நா. அமைப்பை சீரமைக்க பொதுச்செயலாளர் கோபி அன்னான்முன் வைத்துள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என வைகோபேசினார்.