Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவையை விரிவுபடுத்தினார் சந்திரிகா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட நாளிலேயே விரிவாக்கம்செய்யப்பட்டது. மேலும் 2 அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அருதிப் பெரும்பான்மை பலம்இல்லாவிட்டாலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் 44 பேர் கொண்டஅமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றது. மக்கள் கூட்டணி தவிர அரசுக்குஆதரவு கொடுத்துள்ள கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம்அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜம்போ அமைச்சரவைக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரசிங்கே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரியஅமைச்சரவை இலங்கைக்குத் தேவையில்லை. செலவுதான் கூடுதலாகும் என்று அவர்கூறியுள்ளார்.

வளர்ச்சித் துறையில் வடக்குப் பகுதிக்கு என்று ஒரு அமைச்சரும், கிழக்குப் பகுதிக்குஎன்று ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் பிரச்சினைஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது தவிர வேறு பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில்,கூட்டணிக் கட்சிகளின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பாமல் மேலும் இருவருக்குஅமைச்சரவையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இடம் கொடுத்துள்ளார்.

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை காலையில்தான் பதவியேற்றுக் கொண்டது.அன்றைய தினம் மாலையிலேயே மேலும் இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

இப்போது இலங்கை அமைச்சரவையின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. இதனால்,அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே துறையை வேறு வேறு பெயர்களில் அமைச்சர்கள் நிர்வகிக்க வேண்டிய நிலைஅங்கு உருவாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் தந்தைரெக்கி ரணதுங்காவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குஉணவு மற்றும் விற்பனைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எஸ்.பி. திஸநாயகே என்பவரும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அவருக்கு ஏழை மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நாடாளுமன்ற விவகாரத் துறையும்ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மஹிபாலா ஹீராத் என்பவருக்கு கிராமப்புற தொழில் வளர்ச்சி என்றதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கும் திஸநாயகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கும்எந்த வேறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1994-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையில்அமைச்சர்களின் எண்ணிக்கையை 18 ஆகக் குறைப்பேன் என்று சந்திரிகாகுமாரதுங்கா கூறியிருந்தார்.

ஆனால், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தனதுஅமைச்சரவையின் பலத்தைக் குறைக்காமல் 46 ஆக பெரிதாக்கியிருப்பதுசந்திரிகாவுக்கு பெருத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+