கோவையில் பெருகி வரும் சாப்ட்வேர் நிறுவனங்கள்
கோவை:
கோவையில் தகவல் தொழில்நுட்ப புரட்சி வளர்ச்சி பெற உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.இதற்கான அடிப்படை வசதிகள் கோவையில் உள்ளன என மத்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்பபூங்கா நிர்வாக இயக்குனர் எஸ்.என். ஜின்டால் கூறியுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர்கூறுகையில்,
தமிழகத்தில் சாஃப்ட்வேர் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கோவையில் இத்துறை மிகவேகமாகன வளர்ச்சி பெறுவதற்கான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கு தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஜவுளி, ஆட்டோ ஸ்பேர்ஸ், பம்ப் தொழிற்சாலைகளுக்குஅடுத்தபடியாக சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் இங்கு வளர்ச்சி பெறும்.
சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வல்லுனர்கள் இங்கு தான் அதிகமாக உருவாகி வருகின்றனர். ஓரிருவெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கு இருந்தால், பல சிறு தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் உருவாகஏதுவாக இருக்கும்.
இது தவிர கோவையில் வி.எஸ்.என்.எல். மற்றும் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா ஆகியவைசெயல்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கான உகந்த சூழ்நிலை நலவிவருவதால், இது ஒரு சாஃப்ட்வேர் வர்த்தக மையமாக மாறும்.
தமிழகத்திலேயே அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகள் கோவையில் தான் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளின் தகவல் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது என்றார்.
விழாவில் பேசிய தமிழ்வாடு சாஃப்ட்வேர் பூங்கா இயக்குனர் ராஜலட்சுமி,
கோவையிலிருந்து சாஃப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 5 கோடியிலிருந்து ரூ.22 கோடியாக உயர்ந்துள்ளது.இங்குள்ள கம்பெனிகள் 10 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளன.
கல்வி நிறுவனங்களுடன் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள் இணைந்து செயல்படுவதன் மூலம்ஆய்வுகளை வலுப்படுத்த முடியும். திறமைகளை அதிகரிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications