For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோக்கியோ to

By Staff
Google Oneindia Tamil News

சியோல்:

யோசித்து பாருஙகள். டோக்கியோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடலுக்கடியில் ஒருரயில் விட்டால் எப்படி இருக்கும்.

இது ரொம்ப கஷ்டமான விஷயம் தான். ஆனால், ஜப்பானியர்களுக்கு...

நினைத்தாலே மிகவும் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இது சாத்தியம் தான் என்கிறார் ஜப்பானியபிரதமர் யோஷிரா மோரி.

ஜப்பான் இப்படி சொன்னால், பிரான்ஸ் சும்மா இருக்குமா. பிரான்ஸ் அதிபரி கைராக் செய்துபார்த்துவிடலாமே என்கிறார்.

இந்த உரையாடல் நடந்தது கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பியகூட்டுக் கூட்டத்தில். சுமார் 25 நாடுகளின் அதிபர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

தென் கொரியாவை ஜப்பானுடன் கடலடி ரயில் மூலம் இணைப்பதில் கொரியா தீவிரம் காட்டிவருகிறது. இந்த இணைப்பை கொஞ்சம் கொஞ்சமாய் நீட்டித்து டிரான்ஸ் சைபீரியா ரயில்வே உடன்இணைத்துவிடுவது என திட்டமிட்டிருக்கிறார் தென் கொரிய அதிபர் கிம் டே ஜங். டிரான்ஸ் சைபீரியரயில்வே ரஷ்யாவிலிருந்து ஐரோப்பா முழுவதும் ரயில் சேவையை நடத்தி வருகிறது.

ஜப்பான்-கொரியா ரயில் விட வேண்டுமானால் கடலுக்கடியில் 180 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம்அமைத்தாக வேண்டும்.

கடந்த ஆண்டுகளுக்கு முன்பே தென்கொரியா தனது தீவு ஒன்றுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்தும்முயற்சியில் இறங்கியது. ஆனால், வட கொரியாவுடனான போர் இந்தப் பணியை பாதித்து விட்டது.இப்போது இரு கொரியாக்களும் சேர்ந்தே இந்த ரயில் பாதையை அமைப்பது குறித்து பேசிவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X