கலப்பட டீ தொழிற்சாலை நடத்திய 6 பேர் கைது
ஈரோடு:
தேயிலையில் கலப்படம் செய்யும் தொழிற்சாலை நடத்திய 6 பேரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தேயிலை மற்றும் கலப்படப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் அருகே தேயிலைக் கலப்படத் தேயிலைதயாரிக்கப்பட்டு வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துகலப்பட உணவுத் தடுப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தாராபுரம் அருகே உள்ள கொமரபாளையத்தில் கலப்படத் தேயிலைத்தொழிற்சாலை செயல்பட்டு வருவதை அறிந்தனர். அங்கு திடீரென அவர்கள் நடத்திய"ரெய்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள கலப்படத் தேயிலை விற்பனைக்குத் தயார்நிலையில் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், 50 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மரத்தூள், 7 குவிண்டால் முந்திரித்தோல் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இந்த கலப்படத் தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி வந்த மதுரையைச் சேர்ந்தபாஸ்கரன், தென்காசியைச் சேர்ந்த கணேசன் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் வெள்ளகோயிலுக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இங்கு ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளகலப்படத் தேயிலையைப்பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications