நாக்பூர் சாலை விபத்தில் 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தில் சாலை விபத்தில் 13 பேர் பலியானார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்து நடந்தது. விபத்தில் சிக்கியவர்கள்அனைவரும் டாடா சுமோ வேனில் பயணம் செய்தனர். பந்தரா மாவட்டம் பையூர்கிராமத்திற்கு அருகே டாடா சுமோ வந்தபோது, எதிரில் வந்த லாரியுடன் மோதிவிபத்துக்குள்ளாகியது.
விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். இவர்கள்சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பாம்பிலேஸ்வரி கோவிலுக்குச்சென்று விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனையில்இறந்தனர். டாடா சுமோ வேன் வேகமாக சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications