தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஜவுளி ஆலைகளுக்கு அறிவுரை
கோவை:
ஜவுளித் தொழிற்சாலைகள் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய பருத்திக் கவுன்சில் பெடரேஷன் தலைவர் பி. கேபட்டோடியா தெரிவித்தார்.
கோவையில் ஜவுளித் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நடந்தது. இந்தக்கருத்தரங்களில், பெடரேஷன் தலைவர் பி.கே பட்டோடியா பேசியதாவது:
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தொழில்துறையினர் புதிதாக கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இயந்திரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் நவீனமயமாக்கலைஅறிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரங்களை இயக்க தொழிலாளர்கள் திறமையைவளர்த்துக் கொள்ள பயிற்சி பெற வேண்டியது அவசியம். தொழிற்சாலைகள் இத்தகையசூழ்நிலையில் செயல்பாடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
நூலிழைகளை பதப்படுத்தவும், இதனை முறையாக கையாள திறமை வாய்ந்ததொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம்,வியாபார நோக்கில் பல வாய்ப்புகளையும், நன்மைகளையும் அளிக்கக் கூடியது.
எனவே, இத்தகைய தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ளமுன்வர வேண்டும். அப்போது தான் வேகமான வளர்ச்சியை எட்டமுடியும்.
பஞ்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள், அவற்றின் இருப்பு, தேவைஆகியவற்றை அறிய தகவல் தொழில்நுட்பம் அதிவேக தகவல்களை அளிக்கவல்லது.குறிப்பாக "ஆன்லைன் வர்த்தகம், பணப் பறிமாற்றம் ஆகியவற்றிற்கு இந்ததொழில்நுட்பம் வழி வகுக்கும் என்றார்.